Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
தென்காசி:ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் அப்புரானந்த சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலர் பொ. சிவபத்மநாதன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் நேரில் சந்தித்து மனு அளித்தார்.அவர் அளித்த அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது.
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி நெட்டூரில் அமைந்திருக்கிற அருள்மிகு அப்ரானந்த சாமி திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஆகும். தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் வந்து செல்கின்றனர். வைகாசி விசாகம், ஆணி குருபூஜை ஆகிய திருவிழாக்கள் பிரம்மாண்டமாக நடைபெறும். இக்கோயிலுக்கு கடந்த 50 ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. சிறப்பு மிக்க இக்கோயிலுக்கு நிகழாண்டு கும்பாபிஷேகம் நடத்த அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறபட்டுள்ளது.
அப்போது, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, தொழிலதிபர் மணிகண்டன், செங்கோட்டை நகர திமுக செயலர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, கீழப்பாவூர் பேரூராட்சித் தலைவர் ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.